ராணுவ தாக்குதல் பற்றி ஆளாளுக்குப் பேசாதீங்க! - பிரதமர் மோடி
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக தொடர்புடைய அதிகாரிகள், அமைச்சர்கள் தவிர வேறு யாரும் காரசாரமாக விவாதிக்க வேண்டாம் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ச் சூழல் மூண்டுள்ள நிலையில், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி, நதிகளுக்கு அப்பால் உள்ள தொலைதூர பகுதி ஆகியவற்றில் நிலவிவரும் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.
பாகிஸ்தான் எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, அதிகாரப்பூர்வமான நபர்கள் மட்டுமே பேச வேண்டும் என்றும் மற்ற அமைச்சர்கள் அதுகுறித்து பேசுவதைத் தவிர்த்துவிடுமாறும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, இன்று வியாழக்கிழமை (அக்.6) கூடுவதாக இருந்த பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டம், அக்டோபர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications