குடிபோதையில் மெட்ரோ ரயிலில் தள்ளாடிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்
டெல்லி: டெல்லியில் குடிபோதையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் போலீஸ்காரர் ஒருவர் குடித்துவிட்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். ரயிலில் நிற்க முடியாமல் அவர் தள்ளாடியதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் டிரைவர் பிரேக் போட அந்த போலீஸ்காரர் கீழே விழுந்தார்.

இந்த சம்பவத்தை பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டார். இந்த வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியது. இந்நிலையில் அந்த குடிபோதை போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீஸ் கமிஷனர் பி.எஸ். பஸ்ஸி கூறுகையில்,
அந்த போலீஸ்காரரை அடையாளம் கண்டுபிடித்தாகிவிட்டது. அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பணிநேரத்திலோ அல்லது அதன் பிறகோ எந்த ஒரு போலீஸ் அதிகாரியும் சீருடையில் குடிபோதையில் சிக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications