For Daily Alerts
Just In
குடிபோதையில் காவல் நிலையத்தில் வைத்து 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற எஸ்.ஐ.
ராம்பூர்: உத்தர பிரதேசத்தில் குடிபோதையில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கமேரி காவல் நிலயைத்திற்குட்பட்டது பாவ்ராகி காவல் நிலையம். பாவ்ராகி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் தேஜ்வீர் சிங்.
சனிக்கிழமை இரவு அவர் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற 6 வயது சிறுமியை இழுத்து வந்து தனது அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் நிர்வாணமாக இருந்த தேஜ்வீர் சிங்கை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேஜ்வீரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
English summary
A police sub-inspector was arrested for trying to rape a six-year-old girl inside a police station in Uttar Pradesh.
Story first published: Monday, October 2, 2017, 8:54 [IST]