திருப்பதி கோவிலில் துபாய் பக்தரிடம் ரூ.18 லட்சம் ரொக்கம் திருடிய வாலிபர் கைது

துபாயில் வசிப்பவர் பிரசாந்த் சக்சேனா. அவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் ஏழுமலையான தரிசிக்க திருப்பதி வந்தார். நேற்று ரூ.300 சிறப்பு கட்டண வரிசையில் சாமியை தரிசிக்க காத்துக் கொண்டிருந்தார். சாமிக்கு காணிக்கை செலுத்த ரூ.18 லட்சம் மதிப்புள்ள துபாய் கரன்சி நோட்டுகளை தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தார்.
கோவில் அருகே உள்ள பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கியபோது அவர் வைத்திருந்த பணம் மற்றும் நகையை யாரோ கொள்ளையடித்துவிட்டார்கள். இதையடுத்து அவர் கண்காணிப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். உடனே கோவில் கண்காணிப்பு கேமரா மூலம் பக்தர்கள் கண்காணிக்கப்பட்டனர். மேலும் பக்தர்களிடம் நடத்தப்படும் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது.
அப்போது தரிசன வரிசையில் வந்த ஒரு வாலிபரிடம் போலீசார் சோதனையிட்டனர். அவரிடம் சக்சேனாவின் பணமும், நகையும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரை விசாரித்தபோது பணம் மற்றும் நகையைத் திருடியதை ஒப்புக் கொண்டார்.
அந்த வாலிபர் சக்சேனாவிடம் பணம் இருப்பதை பார்த்துவிட்டு வரிசையில் அவருக்கு பின்னால் வந்து நின்றுள்ளார். கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு வரிசையின் பின்புறமாக வந்து நின்றுவிட்டார். அந்த நபரின் பெயர் அஸ்வந்த்(21) என்பதும், அவர் இந்துபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
அந்த நபரை கண்காணிப்பு அதிகாரிகள் கைது செய்து திருமலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதே போன்று பிரமோற்சவத்தின்போது பக்தர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய சென்னையைச் சேர்ந்த நதியா மற்றும் ஜெயலட்சுமி ஆகியோரை திருமலை போலீசார் நேற்று கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications