திருப்பதியிலும் விடாமல் விளாசும் மழை.. திருப்பதி-திருமலை சாலை போக்குவரத்து முடக்கம்.. பக்தர்கள் ஷாக்
அமராவதி: காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகக் கொட்டித்தீர்க்கும் கனமழையால் திருப்பதி நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகத் திருப்பதி கோயிலுக்குச் செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன.
Recommended Video
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை, கடலூர், விழுப்புரம் உட்பட 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பதி கனமழை
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழ்நாட்டில் மட்டுமின்றி தெற்கு ஆந்திரா பகுதிகளிலும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதலே தெற்கு ஆந்திராவில் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் திருப்பதி திருமலையில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் அந்நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நகரின் முக்கிய சாலைகளிலான யுனிவர்சிட்டி ரோடு, ஏர் பை பாஸ் ரோடு ஆகிய சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நிறுத்தம்
இப்படித் தொடர்ந்து கொட்டித்தீர்க்கும் கனமழையால் திருப்பதி மலைக்குப் பாத யாத்திரையாகச் செல்ல பயன்படுத்தப்படும் மலைப் பாதை நேற்று மூடப்பட்டது.. சாலை போக்குவரத்து மட்டும் இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் பாறை சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் திருப்பதி - திருமலை இடையேயான சாலை போக்குவரத்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. திருமலை - திருப்பதி இடையேயான சாலை போக்குவரத்து குறித்து பிறகு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் தேக்கம்
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மழையின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தேவையின்றி வெளியே வரக் கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் முக்கிய சாலைகளில் மரங்களும் முறிந்து விழுந்துள்ள நிலையில், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்துள்ளனர்.

கனமழை
ரோட்டில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணிகள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையில் இருந்து 150 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை - புதுவை இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்த பின்னரே மழையின் அளவு குறையும். இதற்கிடையே திருப்பதியில் பல இடங்களில் சாலைகளே தெரியாத அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ள படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. மேலும், சில இடங்களில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் மழை வெள்ளத்தால் அப்படியே அடித்துச் செல்லப்படும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications