பெங்களூரில் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்: காவலாளியை தாக்கி கொள்ளை முயற்சி
பெங்களூர்: பெங்களூரில் உள்ள ஏ.டி.எம். மையம் ஒன்றுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்த காவலாளி மீது மிளகாய் பொடியை தூவி பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
பெங்களூர் பீனியா அருகே உள்ள திகளரபாளையாவில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. அந்த மையத்தில் தும்கூரைச் சேர்ந்த பசவராஜ் என்பவர் காவலாளியாக உள்ளார். இன்று அதிகாலை 2.30 மணிக்கு முகமூடி அணிந்த 2 பேர் பைக்கில் வந்துள்ளனர். அவர்கள் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்தனர்.
காவலாளி பசவராஜின் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவிவிட்டு அவரை இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் தலை, கை, காலில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார்.
உடனே அந்த இருவரும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அதற்குள் மயக்கம் தெளிந்த பசவராஜ் திருடன் திருடன் என்று கூச்சலிட பக்கத்து கட்டிடத்தில் காவலாளியாக உள்ள பிரகாஷ் ஓடிவந்தார். உடனே அந்த இரண்டு பேரும் அங்கிருந்து பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து பசவராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
முன்னதாக பெங்களூரில் உள்ள ஏ.டி.எம். மையம் ஒன்றில் பெண் அதிகாரியை தாக்கி பணம் பறித்த நபர் இன்னும் போலீசில் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications