நிலநடுக்கம்.. குலுங்கிய ஜெய்ப்பூர்.. ரிக்டர் அளவுகோலில் 3.8-ஆக பதிவு.. மக்கள் அச்சம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 3.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் அறிவித்துள்ளது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் இருந்து வடமேற்கே 92 கிமீ தொலைவில் இன்று காலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நிலடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் ஜலோர் பகுதியில் இன்று அதிகாலை 2.26 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 4.6 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிகானிர் பகுதியில் இன்று அதிகாலை 5.24 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவில் பதிவானதாக என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஜெய்ப்பூரில் இன்று காலை 8.01 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் ஜெய்ப்பூரில் இருந்து வடமேற்கே 92 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொருட் சேதங்கள், உயிரிழப்பு போன்ற எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications