காஷ்மீரை அதிகாலையில் குலுக்கிய நில நடுக்கம்.. மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: காஷ்மீரின் சில பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
இன்று அதிகாலை, 4.23 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம் 10 கிலோமீட்டர் பரப்பளவுக்கு ஆழமானது என்று இநத்ிய நிலவியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வு காரணமாக யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. கடந்த 14ம் தேதி காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், அங்கு பதற்றமான சூழல் எழுந்துள்ளது.
ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் நடுவே ஆங்காங்கு துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், நிலநடுக்கமும் அம்மாநில மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications