பிப்.18-ல் திரிபுரா; பிப். 27-ல் மேகாலயா, நாகலாந்தில் சட்டசபை தேர்தல்!

மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து சட்டசபைகளுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திரிபுரா மாநில சட்டசபை தேர்தல் பிப்ரவரி 18-ந் தேதி நடைபெறும் என்றும் மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 3 மாநிலங்களிலும் மார்ச் 3-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மேகாலயா, நாகலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களின் சட்டசபைகளின் பதவிக் காலம் மார்ச் 6, மார்ச் 13 மற்றும் மார்ச் 14-ந் தேதிகளில் முடிவடைகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

EC to announce poll dates for Meghalaya, Tripura, Nagaland

நாகாலாந்தில் நாகா மக்கள் முன்னணி ஆட்சியில் உள்ளது. பாஜகவும் இந்த அரசில் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. நாகாலாந்து மக்கள் முன்னணி, பாஜக இடையேயான கூட்டணியில் தற்போது சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், இந்த கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றிருக்கிறது. மேகலாயா காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அண்மையில் பாஜக வளைத்திருந்தது.

திரிபுராவில் கால் நூற்றாண்டுகாலமாக தொடர்ந்து இடதுசாரிகளின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இந்த 3 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி அறிவித்தார்.

திரிபுராவில் பிப்ரவரி 18-ந் தேதியும் மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ந் தேதியும் சட்டசபை தேர்தல்கள் நடைபெறும். இம்மூன்று மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+