கோவா சட்டசபை: ஒரே கட்டமாக தேர்தல்.. பிப்ரவரி 14 இல் வாக்குப் பதிவு.. மார்ச் 10 இல் வாக்கு எண்ணிக்கை
கோவா: கோவாவில் 40 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி ஆகும்.
உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் சுற்றுலா தலமான கோவாவில் சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 40 சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக பிரமோத் சவாண்ட் இருக்கிறார். இந்த மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதம் முடிவடைகிறது.

17 தொகுதிகளில் காங்கிரஸ்
கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் 13 தொகுதிகளில் பாஜகவும், 17 தொகுதிகளில் காங்கிரஸும் 3 தொகுதிகளில் காங்கிரஸின் கூட்டணி கட்சியான கோவா பார்வேர்டு கட்சி 3 இடங்களிலும் வென்றது. அது போல் உள்ளூர் கட்சியான மகாராஷ்டிராவாதி கோமந்தக் கட்சி 3 தொகுதிகளிலும் வென்றது. இந்த மாநில சட்டசபையின் பெரும்பான்மை பலம் 21 ஆகும்.

பாஜக தலைமையில் ஆட்சி
இந்த நிலையில் வெறும் 13 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக , அங்கிருக்கும் உதிரி கட்சிகள், சுயேச்சைகளின் துணை கொண்டு ஆட்சி அமைக்க ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் உரிமை கோரியது. இதையடுத்து பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். அதன்படி மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றது.

தட்டி பறித்த பாஜக
இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராடியது. எனினும் ஒன்றும் நடைபெறவில்லை. முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானதை அடுத்து பிரமோத் சாவந்த் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். தற்போது பாஜகவின் பலம் 26 ஆக உள்ளது. 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விலகி பாஜகவில் இணைந்தனர். காங்கிரஸின் பலம் 2 ஆக தேய்ந்துவிட்டது. மற்ற 15 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். இப்படி காங்கிரஸுக்கு கிடைக்க வேண்டியதை பாஜக தட்டி பறித்தது.












Click it and Unblock the Notifications