5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
டெல்லி: கிரிமனல் வழக்குகளில் 5 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையின் போது பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

தற்போது தேர்தல் ஆணையம் இது தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், பொது மக்களின் நலன் கருதி ஒருவர் மீது 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தல் நடப்பதற்கு 6 மாதத்துக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட கிரிமினல் குற்றச்சாட்டுக்கு மட்டுமே இத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த ஜூலையில் இருந்து தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications