இன்று மாலை முதல் எக்சிட் போல் கருத்துக் கணிப்புகளுக்கு அனுமதி
டெல்லி: இன்று மாலை 6.30 மணிக்கு பிறகு எக்சிட் போல்களை(தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்புகளை) வெளியிடலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 7ம் தேதி துவங்கி 9 கட்டமாக நடந்து வருகிறது. இன்று இறுதி கட்டம் மற்றும் 9வது கட்ட தேர்தல் உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 41 தொகுதிகளில் நடந்து வருகிறது.

தேர்தலையொட்டி ஏப்ரல் 7ம் தேதி காலை 7 மணி முதல் மே 12ம் தேதி மாலை 6.30 மணி வரை எக்சிட் போல்களை(தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்புகளை) வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேர்தல் ஆணையரான ஹெச்.எஸ். பிரம்மா கூறுகையில்,
இறுதி கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் சிலவற்றில் மறுவாக்குப்பதிவு நடைபெறலாம். அதனால் வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளான மே 16ம் தேதிக்கு முன்பாக எக்சிட் போல்களை வெளியிடக் கூடாது. 16ம் தேதி மாலை வரை யாரும் எக்சிட் போல் பற்றி வாய் திறக்கக் கூடாது என்றார்.
இதையடுத்து அவரின் பேச்சுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்ட தேர்தல் ஆணையம், மே 12ம் தேதி மாலை 6.30 மணிக்கு பிறகு எக்சிட் போல்களை வெளியிடலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் பிரம்மா வாய் தவறி மே 16ம் தேதி என்று கூறியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications