பிரச்சாரத்தில் இழிவாக பேசக்கூடாது: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தேர்தல் பிரசாரத்தின்போது ஒருவரை ஒருவர் வசைமாறி பொழிவதும்... தனி மனித தாக்குதல்களும் அதிகம் நடைபெறுகிறது. இனிமேல் இழிவாக பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், தேர்தல் பிரசாரத்தின்போது மற்ற கட்சியினரை இழிவாக பேசுவது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல்.
அதையும் மீறி இழிவாக பேசி பிரசாரம் செய்தால் சம்பந்தப்பட்ட கட்சி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது, தேர்தல் பிரசாத்தின்போது ஒருவரை ஒருவர் இழிவாகவும், தரம் தாழ்ந்த வார்த்தையாலும் பேசுவது வாடிக்கையாக உள்ளது. தற்போது, தேர்தல் ஆணையம் கடிவாளம் போட்டுள்ளது.












Click it and Unblock the Notifications