பொருளாதார மந்தநிலைக்கு ப.சி.காரணம்... விமானப் படை முன்னாள் அதிகாரி தற்கொலை- மோடிக்கு கடிதம்!
Recommended Video
அலகாபாத்: நாட்டின் தற்போதைய பொருளாதார மந்தநிலைக்கு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமே காரணம் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார் விமானப் படையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரி பிஜன் தாஸ்.
பொருளாதார தேக்க நிலையால் பல்வேறு துறைகள் பெரும் சரிவை எதிர்கொண்டுள்ளன. இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த விமானப் படையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரியான அஸ்ஸாமை சேர்ந்த பிஜன் தாஸ் (வயது 55) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையில் பிரதமர் மோடிக்கு எழுதப்பட்ட 5 பக்க கடிதம் கைப்பற்றப்பட்டது.
அதில் பொருளாதார மந்த நிலையால் தாம் தற்கொலை செய்வதாகவும் இதற்கு காரணமே முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்தான் என்றும் குற்றம்சாட்டியுள்ளார் பிஜன் தாஸ். மேலும், பொருளாதார நெருக்கடி என்பது திடீரென ஏற்படுவது அல்ல. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசை குற்றம்சாட்டுவது சரியல்ல. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவை தற்காலிக தாக்கங்கள்தான். அதற்கும் பொருளாதார தேக்க நிலைக்கும் தொடர்பு எதுவும் இல்லை.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்கள், மோசமான பொருளாதார கொள்கைகள்தான் தற்போதைய நெருக்கடிக்கே காரணம் எனவும் அக்கடிதத்தில் பிஜன் தாஸ் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் தமது இறுதி சடங்குக்காக ரூ1500, அறை வாடகை ரூ500 ஆகியவற்றையும் அறையில் வைத்துள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தமது மகனுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு அக்கடிதத்தில் பிஜன் தாஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications