ரூ6 ஆயிரம் கோடி மருந்து ஊழல்: பஞ்சாப் அமைச்சருக்கு சம்மன்! ராஜினாமா செய்ய வலியுறுத்தல்!!
சண்டிகர்: ரூ.6,000 கோடி மருந்து ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு பஞ்சாப் மாநில வருவாய்த் துறை அமைச்சர் விக்ரம் சிங் மஜிதியாவுக்கு அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இதனையடுத்து விக்ரம் சிங் மஜிதியா ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆளும் அகாலிதளத்தின் கூட்டணி கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் வைத்திருந்ததாக அனூப் சிங் என்ற வெளிநாடு வாழ் இந்தியரை கடந்த 2013-ஆம் ஆண்டு பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சட்டவிரோதமான மருந்துகளை சில மருந்து நிறுவனங்கள் உற்பத்தி செய்வது தெரிய வந்தது.

இந்த வகையான மருந்துகள் சர்வதேச அளவில் கடத்தப்படுவதும், இதில் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாநிலத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த ஜெகதீஷ் போலா, மருந்து உற்பத்தி நிறுவன உரிமையாளர்கள் பிட்டு, ஜெகஜித் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சர்வதேச போதை மருந்து வியாபாரிகளுக்கும், பஞ்சாப் மாநில அமைச்சர் மஜிதியாவுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. மேலும் சர்வதேச போதை மருந்துத் தரகர் சத்பிரீத் சட்டா இந்தியா வந்த போது, அவருக்கு கார், பாதுகாப்பு வசதிகளை அமைச்சர் செய்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து வரும் 26-ந் தேதி அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் ஆஜராகுமாறு அமைச்சர் மஜிதியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. போதை மருந்துக் கடத்தல், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்படும் என்ற அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், மஜிதியா தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பஞ்சாப்பின் ஆளும் சிரோன்மணி அகாலிதளத்தின் கூட்டணி கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications