விஜய் மல்லையாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்: வரும் 18 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு
டெல்லி: வங்கிகளில் பல ஆயிரம் கோடி மோசடி செய்து லண்டனுக்கு தப்பியதாக கூறப்படும் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு மும்பையில் உள்ள அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், விஜய் மல்லையா வரும் 18-ம் தேதி நேரில் ஆஜர் ஆகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் பொதுத்துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது. கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் கிங்க்பிஷர் விமானத்தை இயக்குவதற்கான லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.

இந்தத் தொகை திருப்பிச் செலுத்தப்படாத நிலையில், மல்லையாவையும், அவரது கிங்பிஷர் நிறுவனத்தையும் கடனை திருப்பிச் செலுத்த தவறிய மோசடியாளர்கள் என்ற பட்டியலின் கீழ் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவை அறிவித்தன. இது தொடர்பாக மல்லையா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ.900 கோடி வங்கி கடன் மோசடி செய்த வழக்கில் விஜய் மல்லையாவுக்கு மும்பை அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
மேலும் மல்லையா கடன் வாங்க உதவியதாக ஐ.டி.பி.ஐ. வங்கியின் முன்னாள் சேர்மேன் மற்றும் நிர்வாக இயக்குநர் யோகேஷ் அகர்வால், மற்றும் இரு நிறுவனங்களின் முன்னாள் இந்நாள் முக்கிய அதிகாரிகள் ஆகியோருக்கும் சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.
முன்னதாக இன்று காலை, முன்னாள் யு.பி.குழுமம் தலைமை நிதி அதிகாரி வி நெடுங்காடி மும்பையில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications