விஜய் மல்லையாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்: வரும் 18 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு
டெல்லி: வங்கிகளில் பல ஆயிரம் கோடி மோசடி செய்து லண்டனுக்கு தப்பியதாக கூறப்படும் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு மும்பையில் உள்ள அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், விஜய் மல்லையா வரும் 18-ம் தேதி நேரில் ஆஜர் ஆகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் பொதுத்துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது. கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் கிங்க்பிஷர் விமானத்தை இயக்குவதற்கான லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.

இந்தத் தொகை திருப்பிச் செலுத்தப்படாத நிலையில், மல்லையாவையும், அவரது கிங்பிஷர் நிறுவனத்தையும் கடனை திருப்பிச் செலுத்த தவறிய மோசடியாளர்கள் என்ற பட்டியலின் கீழ் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவை அறிவித்தன. இது தொடர்பாக மல்லையா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ.900 கோடி வங்கி கடன் மோசடி செய்த வழக்கில் விஜய் மல்லையாவுக்கு மும்பை அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
மேலும் மல்லையா கடன் வாங்க உதவியதாக ஐ.டி.பி.ஐ. வங்கியின் முன்னாள் சேர்மேன் மற்றும் நிர்வாக இயக்குநர் யோகேஷ் அகர்வால், மற்றும் இரு நிறுவனங்களின் முன்னாள் இந்நாள் முக்கிய அதிகாரிகள் ஆகியோருக்கும் சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன.
முன்னதாக இன்று காலை, முன்னாள் யு.பி.குழுமம் தலைமை நிதி அதிகாரி வி நெடுங்காடி மும்பையில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications