‛‛முன்பே வந்த தகவல்’’.. அமலாக்கத்துறை கைது பற்றி ஹேமந்த் சோரன் வெளியிட்ட வீடியோ.. பரபரப்பு
ராஞ்சி: ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய முதல்வராக சாம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அமலாக்க்த்துறை கைது செய்வதற்கு முன்பே ஹேமந்த் சோரன் வெளியிட்ட பரபரப்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநில முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இருந்தார். இவர் மீது நில சுரங்க முறைகேடு புகார் எழுந்தது.

மேலும் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு அழைப்பு கோரி விடுக்கப்பட்ட 10 சம்மன்களை ஹேமந்த் சோரன் நிராகரித்தார்.
அதன்பிறகு கடந்த மாதம் 20ம் தேதி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் ராஞ்சியில் வைத்து விசாரணை நடத்தினர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் 30 மணிநேரம் மாயமானார். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பிஎம்டபிள்யூ உள்பட 2 கார், ஆவணங்கள், ரூ.36 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து மீண்டும் நேற்று ராஞ்சியில் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். 7 மணிநேர விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு ஹேமந்த் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரான தமிழகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். இதையடுத்து புதிய முதல்வராக சாம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
#WATCH | Former Jharkhand CM Hemant Soren before his arrest by ED yesterday said, "Most probably ED will arrest me today, but I am not worried as I am Shibu Soren's son...After a full day of questioning, they decided to arrest me in matters which are not related to me. No… pic.twitter.com/8c3b19yyOL
— ANI (@ANI) February 1, 2024
இந்நிலையில் தான் கைதுக்கு முன்பாக ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், ‛‛விசாரணையின் முடிவில் பெரும்பாலும் அமலாக்கத்துறை என்னை கைது செய்யும். கைது செய்வதால் நான் கவலைப்படபோவது இல்லை. ஏனென்றால் நான் ஷிபு சோரனின் மகன். எனக்கு தொடர்பில்லாத அதேவேளையில் எந்த ஆதாரத்தையும் எனக்கு எதிராக அவர்களால் கண்டுபிடிக்கவில்லை.
டெல்லி இல்லத்தில் சோதனை நடத்தி எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சித்துள்ளனர். ஏழைகள், தலித், ஆதிவாசி, அப்பாவி மக்களுக்கு எதிராக வன்கொடுமை செய்பவர்களுக்கு எதிரான ஆதிவாசிகள் மீது வன்கொடுமை செய்பவர்களுக்கு எதிராக நாம் புதிய போராட்டத்தை நடத்த வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications