தேர்தல் விதி மீறல்... ராகுல் காந்தி,அமித் ஷா,லாலு பிரசாத் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
டெல்லி: பீகாரில் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி,பாரதீய ஜனதா கட்சி தேசியத்தலைவர் அமித் ஷா, ராஷ்டீரிய தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பீகாரில் சட்டசபைத் தேர்தல் ஐந்து கட்டங்களாக நடந்து வருகிறது. இத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, தேர்தல் விதியை மீறியதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி,பாரதீய ஜனதா கட்சி தேசியத்தலைவர் அமித் ஷா, ராஷ்டீரிய தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, ராகுல் காந்தி,அமித் ஷா, லாலு பிரசாத் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேர்தல் விதி மீறல் குறித்து நாளை மறுநாளுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்க தவறினால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா கட்சி தேசியத்தலைவர் அமித் ஷா, ‘பீகாரில் பாஜக தோற்றால் பாகிஸ்தானில் வெடி வெடித்துக் கொண்டாடுவார்கள்' என பிரச்சாரத்தில் கூறியது தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதப்பிரச்சினையை தூண்டும் வகையில் அமித் ஷா பேசியது, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதற்கு அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ‘பாஜக இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே வன்முறையை தூண்டும் வகையில் நடந்து கொள்வதாக பேசியிருந்தார். இது தொடர்பாக அவரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
ராஷ்டீரிய தலைவர் லாலு பிரசாத் யாதவ், அமித் ஷாவை நரபட்சி என கூறியதற்காக அவரிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.












Click it and Unblock the Notifications