Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகம் படுகொலையான இந்திராவின் எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டது இன்றுதான்-மறக்கமுடியாத காட்சிகள்!

42 ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஜூன் 25-ல் தான் இந்திரா அவசரநிலையை அமல்படுத்தினார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய ஜனநாயகத்தின் இருண்டபக்கமாம் அவசரநிலை பிரகடனம் நாட்டில் அமல்படுத்தப்பட்ட நாள் இன்றுதான். 1975-ம் ஆண்டு இதே ஜூன் 25-ல்தான் அவசரநிலை பிரகடனம் அமலானது.

ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரம் தலைவிரி கோலத்தில் ஊழித் தாண்டவத்தை தெருத்தெருவாக அரங்கேற்றிய காலம் 1975-76கள்தான்.. அவசரநிலை பிரகடனம் என்ற பெயரில் இந்திரா எனும் சர்வாதிகாரியும் அவரது மகன் சஞ்சய்காந்தியும் தேசத்தை சூறையாடிக் கொண்டிருந்த காலம் அது.

இன்றைக்கும் அந்த ஜனநாயகப் படுகொலைக்கு பல்லாயிரம் பேர் சாட்சிகளாக இருக்கின்றனர்... இந்திராவின் நரவேட்டையை நினைவூட்டும் சில படங்களை பார்ப்போம்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ்

ஜார்ஜ் பெர்னாண்டஸ்

இது முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். தொழிற்சங்க தலைவராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸை தேடித் தேடி வேட்டையாடியது இந்திராவின் எமர்ஜென்சி போலீஸ்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன்

ஜெயப்பிரகாஷ் நாராயணன்

மக்கள் தலைவராக விளங்கிய ஜெயப்பிரகாஷ் நாராயணன் இவர். இந்திராவின் எமர்ஜென்சி போலீசால் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தாக்கப்படும் காட்சிதான் இது.

பத்திரிகைகளுக்கு நெருக்கடி

பத்திரிகைகளுக்கு நெருக்கடி

இது எமர்ஜென்சி காலத்தில் வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு. இப்படித்தான் பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.

சினிமாவுக்கும் தடை

சினிமாவுக்கும் தடை

இது அப்போது வெளியாக இருந்த திரைப்படம். எமர்ஜென்சி காலத்தில் 2 சினிமாக்களுக்கும் கூட தடை விதித்தது இந்திராவின் தர்பார்.

இப்படித்தான் இருந்தது இந்திராவின் அந்த எமர்ஜென்சி ஆட்சி!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+