For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சபரிமலை தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு இல்லை.. தேவசம் போர்டு அறிவிப்பு

சபரிமலை வழக்கில் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மேல்முறையீடு செய்ய போவதில்லை என்று திருவாங்கூர் தேவசம் போர்ட் கூறியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலை வழக்கில் மேல்முறையீடு செய்ய போவது இல்லை - தேவசம் போர்டு

    திருவானந்தபுரம்: சபரிமலை வழக்கில் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மேல்முறையீடு செய்ய போவதில்லை என்று திருவாங்கூர் தேவசம் போர்ட் கூறியுள்ளது.

    பிரசித்திபெற்ற கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களையும் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இரண்டு நாட்களுக்கு முன் தீர்ப்பளித்தது. சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

    Entry of Women into Sabarimala: We wont appeal the verdict for review says Devasom board

    இதனால் அனைத்து வயது பெண்களும் இனி சபரிமலை கோவிலுக்குள் செல்ல முடியும். இந்த நிலையில் இந்த தீர்ப்பிற்கு திருவாங்கூர் தேவசம் போர்ட் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என்றது.

    இந்த நிலையில் அந்த முடிவில் இருந்து தற்போது திருவாங்கூர் தேவசம் போர்ட் பின்வாங்கி உள்ளது. சபரிமலை வழக்கில் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மேல்முறையீடு செய்ய போவதில்லை என்று திருவாங்கூர் தேவசம் போர்ட் கூறியுள்ளது.

    சபரிமலையில் பெண்களை அனுமதிப்போம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளோம் என்றுள்ளது.

    அதேபோல் கேரளா அரசும் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மேல்முறையீடு செய்ய போவதில்லை என்று கூறியுள்ளது. இதனால் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்வது உறுதியாகி உள்ளது.

    English summary
    Entry of Women into Sabarimala: We won't appeal the verdict for review says Devasom board.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X