புதிய கட்சி தொடங்கினார் கர்நாடக முன்னாள் அதிரடிப்படை தலைவர் சங்கர் பிதரி
Subscribe to Oneindia Tamil

சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் தேடுதல் வேட்டையில் கர்நாடக மாநில சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக இருந்தவர் சங்கர் பிதரி. இவர் ஓய்வு பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளராக இருந்தார்.
அதன் பிறகு முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவராக இருந்தார். இதற்கிடையில் அக் கட்சி தலைமைக்கும், அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் நேற்று பெங்களூருவில் ஜனசக்தி சாமான்ய ஜனரா சக்தி (JANASHAKTI SAMANYA JANARA SHAKTI) என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.












Click it and Unblock the Notifications