கொல்கத்தாவில் மிட்நைட் பயங்கரம்.. ரவுடிகளிடம் சிக்கி கதறிய முன்னாள் 'மிஸ் இந்தியா'
கொல்கத்தா: முன்னாள், மிஸ் இந்தியா, உஷோஷி சென்குப்தாவிற்கு, இந்த இரவு மறக்க முடியாத இரவாக மாறிவிட்டது. பீதி, பயம், அச்சம் என அனைத்து உணர்வுகளையும் ஒரே நேரத்தில் சந்தித்துள்ளார் உஷோஷி சென்குப்தா.
2010ஆம் ஆண்டில், மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் வென்றவர்தான், உஷோஷி சென்குப்தா. கொல்கத்தாதான் இவரது சொந்த ஊர். அவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு திடுக்கிடும் சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது பேஸ்புக் போஸ்ட்டில் கொல்கத்தாவில் தனக்கு நிகழ்ந்த ஒரு மோசமான அனுபவத்தை பதிவு செய்துள்ளார். என்ன சொல்லியுள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்:
|
கார் மீது மோதல்
கடந்த, 17ஆம் தேதி இரவு 11.40 மணியளவில் கொல்கத்தாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருந்து நானும் என் சக ஊழியரும் ஊபர் வாடகை காரில், வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது பைக்குகளில் ஒரு கும்பல் எங்களை பின்தொடர்ந்தது. அவர்கள் கார் மீது பைக்கை கொண்டு வந்து மோதச் செய்தனர். இதன்பிறகு காரை நிறுத்தி, டிரைவரை தாக்கினர்.

வீடியோ
இந்த சம்பவங்களை நான் காரில் இருந்தபடியே வீடியோவாக எடுத்தேன். அப்போது, அந்த ரவுடி கும்பலைச் சேர்ந்த ஒருவர், என் செல்போனை பறிக்க முயற்சி செய்தார். இதையடுத்து, நான் அங்கேயிருந்து அலறியபடியே தப்பியோடினேன். இதனிடையே, சற்று தூரத்தில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரியை பார்த்தேன். அவரிடம் நடந்த சம்பவத்தைச் சொல்லி அழுதேன். ஆனால் அவரோ, சம்பவம் நடந்த பகுதி, தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்டது இல்லை என்றும், வேறு காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கும்படியும் கூறினார்.

மீண்டும் அட்டகாசம்
ஆனால், நேரம் தாமதமானால், டிரைவரை, கொன்றுவிடுவார்கள் என்று கூறி கெஞ்சினேன். இதையடுத்து, அரைகுறை மனதோடு, என்னோடு அந்த போலீசார் வந்தனர். போலீசாரை பார்த்ததும், ரவுடிகள் தப்பியோடிவிட்டனர். ஆனால், இத்தோடு இப்பிரச்சினை ஓயவில்லை. அதே காரில் வீட்டுக்கு புறப்பட்டோம். ஆனால், அந்த ரவுடி கும்பல் விடவில்லை. மீண்டும் காரை பின்தொடர்ந்தனர். கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
|
7 பேர் கைது
என்னை காரை விட்டு வெளியே இழுத்துப் போட்டு, செல்போனை உடைக்க முயன்றனர். நான் கூச்சலிட்டேன். அப்பகுதி மக்கள் இதைக் கேட்டு ஓடி வந்தனர். எனவே ரவுடிகள் ஓடிவிட்டனர். இதையடுத்து, பவானிபோர் காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க டிரைவருடன், சென்றேன், அங்கு என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டுவிட்டு புகாரை பெற்றனர். ஆனால் டிரைவர் புகாரை ஏற்க மறுத்தனர். ஒரே சம்பவத்திற்கு 2 புகாரை வாங்க முடியாது என கூறிவிட்டனர். இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் குமுறியுள்ளார், உஷோஷி சென்குப்தா. இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications