TIMES NOW-CNX Mega Exit poll: ம.பியில் 4வது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்கும்!
மத்திய பிரதேசத்தில் பாஜக நான்காவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
Recommended Video
போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக நான்காவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதமாக நடந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தற்போது முடிந்துள்ளது. சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாக தொடங்கியுள்ளது. தற்போது டைம்ஸ் தொலைக்காட்சி நடத்திய தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கருத்து கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.
அதில் 126 தொகுதிகளை பாஜக கைப்பற்றும். காங்கிரஸ் கூட்டணி 89 தொகுதிகளை வெல்லும்.பகுஜன் சமாஜ் 6, பிறர் 9 தொகுதிகளை வெல்வார்கள் என்று டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 2003ம் ஆண்டில் இருந்தே ஆட்சியில் இல்லை. கடைசியாக அங்கு திக் விஜய் சிங் காங்கிரஸ் சார்பாக பலமான முதல்வராக இருந்தார். அதன்பின் உமா பாரதி தொடங்கி இப்போது சிவராஜ் சிங் சவுகான் வரை 15 வருடம் அங்கு பாஜக கட்சிதான் ஆட்சி செய்து வருகிறது.
இதனால் மீண்டும் அங்கு பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் கூறியுள்ளது.