இணைய சமநிலை தொடர்பான அறிக்கை வெளியானது! போர்டு பவுண்டேசனுடன் ஆலோசனை நடத்தியதால் சர்ச்சை!!
டெல்லி: இணைய சமநிலை தொடர்பான அறிக்கையை இந்திய தொலைத் தொடர்புத் துறை இன்று வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள குழு சர்ச்சைக்குரிய ஃபோர்டு பவுண்டேசன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது சர்ச்சையாகவும் வெடித்துள்ளது.
இணைய சமநிலை என்பது இணைய பயன்பாட்டில் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமாகக் கொடுக்கப்படும் சேவை. அதாவது எந்த ஒரு வெப்சைட்டுக்கும் ஆப்-க்கும் கூடுதலாக கட்டணம் இல்லாமல் அனைத்து சேவைகளையும் ஒரே கட்டணத்தில் பெறுவது என்பதாகும்.

தனியார் நிறுவனங்கள் குமுறல்
ஆனால் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், வைபர், ஸ்கைப் போன்ற சேவைகளால் இழப்பு ஏற்படுகிறது; ஆகையால் இவற்றுக்கு கூடுதல் கட்டணம் அவசியம் என தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டிராய் அமைப்பிடம் முறையிட்டன.

கொந்தளித்த இணையவாசிகள்
இந்த விவகாரம் இணையவாசிகளை கொந்தளிக்க வைத்தது. பின்னர் இணைய சமநிலை தொடர்பாக மக்களின் கருத்துகளை கேட்டது தொலைத் தொடர்புத் துறை.
|
அறிக்கை வெளியீடு
இந்த கருத்துகளின் அடிப்படையில் தற்போது இணைய சமநிலை தொடர்பான அறிக்கையை தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது.

24 பரிந்துரைகள்
மொத்தம் 111 பக்கம் விரிவான அறிக்கை இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் சுருக்கமாக 24 பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இவை இணையவாசிகளுக்கு சாதகமானதாக இருப்பதாக கருத்துகள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த பரிந்துரைகள் மீது ஆகஸ்ட் 15-ந் தேதி கருத்துகளை தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. (அறிக்கையை பார்க்க)

ஃபேஸ்புக் ஆதரவு
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிர்வாகத்தின் துணைத் தலைவர் கெவின் மார்ட்டின், இணைய சமநிலை தொடர்பான இந்திய தொலைத் தொடர்புத் துறையின் பரிந்துரைகள் இணையதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். இந்த பரிந்துரைகளை ஃபேஸ்புக் ஆதரிக்கிறது என்றார்.
|
ஃபோர்டு பவுண்டேசனுடன் எதுக்கு ஆலோசனை
இதனிடையே இணையசமநிலை குறித்த பரிந்துரைகளை அளித்த குழு, அமெரிக்காவின் ஃபோர்டு பவுண்டேசன் நிர்வாகிகளை கலந்து ஆலோசித்திருப்பது சர்ச்சையை வெடிக்க வைத்துள்ளது. எதற்காக ஃபோர்டு பவுண்டேசனுடன் இணையசமநிலை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது? அதுவும் வெளிநாட்டு நிதி உதவி சர்ச்சையில் சிக்கிய இந்த என்.ஜி.ஓ.வின் நிர்வாகிகளுடன் ஏன் ஆலோசனை நடத்தப்பட்டது என்ற கேள்விகள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications