லிவ் இன் ரிலேஷன்ஷிப் தோல்வியே பலாத்கார வழக்குகள் அதிகரிக்க காரணம்: டெல்லி ஹைகோர்ட்
டெல்லி: திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் மனைவியாக வாழும் லிவ் இன் முறை தோல்வி அடைவது தான் பலாத்கார வழக்குகள் அதிகரிக்க முக்கிய காரணம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் காதலை ஏற்றுக் கொள்ளாத அவரது தந்தை உள்ளிட்ட குடும்பத்தார் 4 பேர் அவரின் 24 வயது காதலரை கொலை செய்தனர். இந்த வழக்கில் அந்த 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
டெல்லி உயர் நீதிமன்றம் அந்த 4 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கைலாஷ் கம்பீர் மற்றும் சுனிதா குப்தா கூறுகையில்,
இளம் பெண்கள் திருமணம் செய்து கொள்வது மற்றும் லிவ் இன் முறைப்படி வாழ்வது குறித்து முடிவு எடுக்கையில் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும். லிவ் இன் முறை தோல்வி அடைவது தான் பாலியல் பலாத்கார வழக்குள் அதிகரிக்க முக்கிய காரணம் ஆகும். பொறுப்பில்லாமல் எடுக்கும் முடிவுகளால் உறவு முறிகிறது. இந்த விஷயத்தில் பெற்றோர் பொறுமையுடன் செயல்பட வேண்டுமே தவிர அவர்களை பிரிப்பதிலேயே குறியாக இருக்கக் கூடாது.
பெற்றோர் பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்றனர்.












Click it and Unblock the Notifications