”போலி” சிபிஐ அதிகாரியை செருப்பால் செம காட்டு காட்டிய உபி மக்கள்!
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தரபிரதேசத்தில் சிபிஐ அதிகாரி போல் நடித்தவரை மக்கள் அடித்து, உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சிபிஐ அதிகாரி போல் நடித்து மக்களை ஏமாற்றிய நபர் பிடிபட்டார். கோட்டு, சூட்டெல்லாம் போட்டுக் கொண்டு நிஜ சிபிஐ அதிகாரி போலவே நடித்துள்ளார் அவர்.
முகேஷ் குமார் என்பவர் உத்தரப்பிரதேசத்தில் சிபிஐ அதிகாரி போல் நடித்து பொதுமக்களை மட்டுமல்லாது, தொழிலதிபர்களையும் ஏமாற்றி வந்துள்ளார். நடுத்தர வயதான இவர் பல்வேறு தொழிலதிபர்களிடம் பல்லாயிரம் ரூபாய்களை அபேஸ் செய்துள்ளார்.
இந்நிலையில் பிடிபட்ட அவரை பொதுமக்கள் செருப்பால் அடித்து இழுத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications