காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரி டெல்லியில் நேற்று விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை வாங்கித் தரவும் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது:

காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க மறுக்கிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் அதனையும் ஏற்க மறுக்கிறது மத்திய அரசு. இதுபோன்ற விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று மத்திய அரசு சொல்லி வருகிறது. இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய துரோகமாகும்.
காவிரி பிரச்சனை தொடர்பாக எங்களுடைய குறைகளை பிரதமர் மோடி கேட்பார் என்று நம்பி டெல்லி வந்தோம். ஆனால் அவர் எங்களை சந்திக்க நேரம் அளிக்கவில்லை. வேளாண் துறை அமைச்சரை பார்க்க மட்டுமே எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ராஜ்யசபா உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் செய்தியாளர்களிடம் பேசும் போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு இதுவரை முயற்சி செய்யவில்லை. இந்த விவகாரத்தை சட்டப் பிரச்னையாக மாற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற உண்மைக்கு மாறான நடவடிக்கையை செயல்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருந்தால் காவிரி டெல்டா பகுதிகள் காப்பாற்றப்பட்டிருக்கும்.
மத்திய அரசின் வேளாண், பொருளாதாரக் கொள்கைகள் விவசாயிகளையும், அமைப்பு சாராத் தொழிலாளர்களையும் பாதிக்கும் வகையில் உள்ளன. தமிழகத்தில் டெல்டா மாவட்டத்தில் 12 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனைக்குரியது.
பிரதமர் மோடி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நடவடிக்கைகளில் பங்கேற்காமல் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். பழைய 500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்புக்குப் பிறகு, கிராமப்புற விவசாயமும், கூட்டுறவு சங்கங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்று பதில் அளிக்க வேண்டும் என்றும் டி.கே. ரங்கராஜன் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். திருநாவுக்கரசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்?












Click it and Unblock the Notifications