ராகுல்.. நல்ல அட்வைசரை வெச்சுக்குங்க..: பரூக் அப்துல்லா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் அவசர சட்டம் தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தவறான ஆலோசனையால் கருத்து தெரிவித்திருக்கிறார் என்று மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
ராகுல் காந்தியின் விமர்சனம் தொடர்பாக கருத்து தெரிவித்த பரூக் அப்துல்லா, அவசர சட்ட நாடகம் துரதிருஷ்டவசமானது.. அவருக்கு தவறான ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்திலாவது நல்ல ஆலோசகர்களை ராகுல் தமது பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரிபாதியும் ராகுலை விமர்சித்திருக்கிறார். "ராகுல் காந்தி ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. நாங்கள் உங்கள் ஆதரவாளர்கள் அல்ல.. உங்கள் கூட்டணியில் இருப்பவர்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications