பாஜக தேர்தல் அறிக்கைக்கு பரூக், ஒமர், பிரகாஷ் காரத் கண்டனம்!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மிருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது அரசியல் சாசனப் பிரிவை நீக்குவோம் என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கைக்கு மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் பிரகாஷ் காரத் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370ஐ நீக்குவோம் என்பதும் ஒரு அம்சம்.
இந்த வாக்குறுதிக்கு மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட இதர தேசிய கட்சிகள் 370வது பிரிவை நீக்க அனுமதிக்காது என்றார்.
இதேபோல் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும், வாக்கு வங்கி அரசியலுக்கான வாக்குறுதிதான் இது என விமர்சித்துள்ளார்.
ஹிந்துத்துவா அஜெண்டா
மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பிரகாஷ் காரத்தும் பாஜகவின் தேர்தல் அறிக்கையை விமர்சித்துள்ளார். ராமர் கோயில் கட்டுதல், பொதுசிவில் சட்ட்டம், 370வது பிரிவு நீக்கம் என ஹிந்துத்துவா கொள்கைகள் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக அவர் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications