14 வயது மகளை 4 வருடமாக சீரழித்த வெறியன் கைது
பெற்ற மகளை கற்பழித்த தகப்பனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Recommended Video

மும்பை: பெத்த மகளையே வெறிபிடித்த மாதிரி பலாத்காரம் செய்த தந்தையால், மகாராஷ்டிராவின் தானே நகரே ஆடிப் போயுள்ளது.
மகாராஷ்டிராவின் தானே பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. தந்தைக்கு 40 வயது, மகளுக்கு 14 வயது.

மனைவியை பிரிந்தார்
திருமணமானது முதலே மனைவியுடன் இவருக்கு சண்டையும் தகராறும் இருந்து வந்திருக்கிறது. அதனால் 7 வருடங்களுக்கு முன்னாடியே மனைவி, இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். போனவர் தன் பெண் குழந்தையையும் தூக்கி கொண்டு போயிருந்தால் நல்லா இருந்திருக்கும்.

தகப்பன்-மகள்
கோபத்தில் இந்த தகப்பனிடம் கொடுத்துவிட்டு போயிருக்கிறார். 7 வயதிலிருந்தே பெற்ற மகளை வளர்த்து வந்த தந்தைக்கு திடீரென காம பித்து ஏறி விட்டது. வீட்டில் வேறு யாருமே கிடையாது. தந்தையும்-மகளும்தான்.

4 வருடங்களாக சித்ரவதை
4 வருஷத்துக்கு முன்பிருந்தே மகளை பலாத்காரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார் தந்தை. அதுவும் பலமுறை அந்த குழந்தையை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி இருக்கிறார். 4 வருடங்களாக தந்தையிடம் சிக்கி சின்னாபின்னாமான அந்த பிஞ்சு குழந்தை வேறு வழி இல்லாமல் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்லி அழுதுள்ளது. அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் 2 நாளுக்கு முன்பு போலீசில் புகார் அளித்தார்கள்.

மனிதனா? மிருகமா?
அதனடிப்படையில் 40 வயது தந்தை மீது ஐபிசி பிரிவு 376-ன் கீழும், போக்ஸோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியோ, மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல்களை தானே போலீசார் தெரிவித்துள்ளனர். இப்படி மனசாட்சியே இல்லாமல் மகளிடம் வன்மத்தை காட்டிய இவர்கள் எல்லாம் என்ன ஜென்மங்களோ!!
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications