100 சதவீத அட்டென்டன்ஸ் கொடுத்த "லட்சுமி".. தெருநாய்களால் கடித்து பலியான கொடூரம்.. மாணவர்கள் சோகம்
அமராவதி: ஆந்திரத்தில் பள்ளிக்கூடத்திற்கு தவறாமல் வந்து மாணவர்களோடு மாணவராக பழகிய குரங்கு லட்சுமி உயிரிழந்தது. இதனால் மாணவர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் வெங்காலம்பள்ளி பகுதியில் உள்ளது அரசு பள்ளி. இ்நத பள்ளிக்கு லங்கூர் வகை 2 வயது குரங்கு ஒன்று தினமும் வந்து மாணவர்களுடன் பாடத்தை கவனிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலானது.
மாணவர்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாததால் பள்ளி நிர்வாகமும் அந்த குரங்கை துரத்தாமல் பள்ளி வகுப்பறைக்கு அனுமதித்தனர். தினந்தோறும் பள்ளிக்கு வருவது, மாணவர்கள் பாடம் எழுதுவதை உன்னிப்பாக கவனிப்பது உள்ளிட்ட காரணங்களால் ஈர்க்கப்பட்ட மாணவர்களுக்கு அந்த பெண் குரங்கிற்கு லட்சுமி என பெயரிட்டனர்.

லத்தீஃப்
இந்த நிலையில் லட்சுமி நேற்று மதிய உணவு இடைவேளைக்காக வெளியே சென்ற போது தெருநாய்க்களால் தாக்கப்பட்டு இறந்தது. இதுகுறித்து பள்ளி முதல்வர் சையது அப்துல் லத்தீஃப் கான் கூறுகையில் லட்சுமி தினமும் மாணவர்களுடன் மதிய உணவை அருந்தும்.

இடைவேளை
லட்சுமிக்காக மாணவர்கள் வாழைப்பழம், பழங்கள் உள்ளிட்டவைகளை உணவாக கொடுப்பர். எனினும் லட்சுமி உணவு இடைவேளையின்போது வெளியே சென்றுவிட்டு பள்ளி தொடங்கும்போது மீண்டும் வந்துவிடுவது வழக்கம்.

காப்பாற்ற முயற்சி
அதுபோல் நேற்றும் மதிய உணவு இடைவேளைக்காக லட்சுமி வெளியே சென்றது. அப்போது அதன் அழுகுரல் கேட்டது. என்னவென பார்த்தபோது அந்த குரங்கை சில தெருநாய்கள் கடித்து குதறியது. லட்சுமியை காப்பாற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் ஓடினோம். ஆனால் அதற்கு லட்சுமி உயிரிழந்துவிட்டது என்றார்.

2 பலியாகின
அருகில் உள்ள காடுகளிலிருந்து லட்சுமியுடன் இரண்டு லங்கூர் குரங்குகள் இந்த பள்ளி வளாகத்திற்கு கடந்த ஜூலை மாதம் வந்தன. அப்போது மற்ற இரண்டு குரங்குகள் சிமென்ட் கலக்கும் இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டன. லட்சுமி மட்டும் இருந்தது.

காயப்படுத்தாத லட்சுமி
அது 100 சதவீதம் பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தது. அதன் வருகை பதிவேடு சதவீதமும் 100 ஆகும். இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களில் வசிக்கும். இது வரை லட்சுமி யாரையும் காயப்படுத்தியது இல்லை. அதை கிராமத்தை சேர்ந்த ஒருவர் கொண்டு சென்று வளர்ப்பதற்காக அழைத்து சென்றார்.

சோகம்
ஆனால் அவருடன் இருக்க விருப்பம் இல்லாமல் வியாழக்கிழமை மீண்டும் பள்ளிக்கே வந்துவிட்டது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் பள்ளிக்கு வந்த லட்சுமி நேற்று பலியாகிவிட்டது. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் சோகத்தில் உள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications