பெண்களின் தலைமுடியை வெட்டும் விஷமக் கும்பலால் பதற்றம்... காஷ்மீரில் இணைய சேவை "கட்"!
காஷ்மீரில் பெண்களின் தலை முடியை பலவந்தமாக வெட்டிவிடும் குழுக்களால் ஏற்பட்ட கலவரம் காரணமாக இணைய சேவை முடக்கப்பட்டது.
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீரில் சிலநாட்களாக சாலையில் செல்லும் பெண்களின் தலைமுடியை மர்ம நபர்கள் சேர்ந்து பலவந்தமாக வெட்டிவிடுகின்றனர். இதையடுத்து முடிகளை வெட்டும் நபர்கள் என சந்தேகிக்கப்பட்டு பலர் காஷ்மீரில் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல பகுதிகளில் நடந்த தொடர் தாக்குதலை அடுத்து காஷ்மீரில் இணைய சேவை முடக்கப்பட்டது.
காஷ்மீரில் வெவ்வேறு பகுதிகளில் சிலநாட்களாக பெண்கள் சாலையில் தனியாக செல்லும் போது மர்ம நபர்கள் குழுவாக வந்து வலுக்கட்டாயமாக அந்தப் பெண்களின் முடிகளை வெட்டி விடுகின்றனர். காஷ்மீரில் நடக்கும் இந்த வினோத பிரச்சனை காரணமாக சில நாட்களாக காஷ்மீர் வீதிகள் பதற்றத்தில் உள்ளது.

யார் இந்தச் செயலை செய்வது என்பதை கண்டுபிடிக்க முடியாததால் அங்கு கலவரங்கள் மூண்டு வருகின்றன. முடிகளை வெட்டுபவர் என்று சந்தேகிக்கப்பட்டு பலரும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். முடிகளை வெட்டும் வீடியோக்கள் சில இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று சாலையில் நடந்து சென்ற 70 வயது முதியவர் அந்த வீடியோவில் இருந்த நபரின் ஜாடையில் இருந்ததால் ஒரு இளைஞரால் கல்லால் அடித்து கொல்லப்பட்டார். இதேபோல் காஷ்மீரின் வெவேறு பகுதிகளில் பலர் சந்தேகத்தின் பேரில் கல்லால் அடித்து தாக்கப்பட்டுள்ளனர். போலீசார் இவ்வாறு கல்லால் அடிக்கும் செயல்களில் ஈடுபடுவோர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.
முடிகளை வெட்டும் குழுக்கள் என் சந்தேகிக்கப்பட்டு பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தால் பரவி வரும் மோதல் காரணமாக காஷ்மீரில் நேற்று முழுக்க இணைய சேவை முடக்கப்பட்டது. நேற்று மாலைக்கு மேல் மீண்டும் இணைய சேவை சீராக இயங்க ஆரம்பித்தது. இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications