Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுல் காந்தி மீது பாய்ந்த வழக்கு.. வாயை விட்டு வம்பில் சிக்கிய காங்கிரஸ் தலைவர்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: ‛பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமில்லை.. இந்தியாவுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது'' என்று பேசிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது ஒடிசா போலீசார் 2 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ராகுல் காந்தி. தற்போது நாடாளுமன்றத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ராகுல் காந்தி தனது உரையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

rahul gandhi congress odisha

நாடாளுமன்றம் மற்றும் பிரசார பொதுமேடை உள்பட கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி விளாசி வருகிறார். இதற்கிடையே தான் கடந்த 15ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது.

இந்த அலுவலகத்தை சோனியா காந்தி திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். விழாவில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது, ‛‛நம் சித்தாந்தம் என்பது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் போல் ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்டது. தொடர்ந்து ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்த்து சண்டையிட்டு வருகிறோம். இந்த சண்டையை சரியான முறையில் செய்கிறோம் என்று நான் நினைக்கவில்லை.

பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு எதிராக சண்டையிடுவதாக நீங்கள் நினைத்தால் உங்களுக்கு சரியான புரிதல் என்பது இல்லை. பாஜக, ஆர்எஸ்எஸ் நம் நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் கைப்பற்றி உள்ளது. இப்போது நாம் (காங்கிரஸ்) பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம்'' என்றார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நம் நாட்டில் இருந்து கொண்டே இந்திய அரசுக்கு எதிராக போராடுகிறோம் என்று உள்நோக்கத்துடன் ராகுல் காந்தி பேசியுள்ளதாக கூறி பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர். ராகுலின் இந்த பேச்சை கண்டித்து ராமா ஹரி புஜாரி என்பவர் ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரை தொடர்ந்து ராகுல் காந்தி மீது 2 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி பிஎன்எஸ் சட்டப்பிரிவு 152 (இந்திய இறையாண்மை, ஒற்றுமைக்கு எதிராக பேசுதல்), பிஎன்எஸ் சட்டப்பிரிவு 197 (1) (d)(தவறான கருத்துகள் மூலம் இந்திய இறையாண்மை, ஒற்றுமைக்கு மிரட்டல் விடுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் ராகுல் காந்தி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி பிஎன்எஸ் சட்டப்பிரிவு 158 (இந்திய இறையாண்மைக்கு ஆபத்தை விளைவித்தல்), 191 (1) (தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்படுதல்) என்று 2 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது ராகுல் காந்திக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

ராகுல் காந்தி மீது ஏற்கனவே இதுதொடர்பான புகாரில் அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். தற்போது ஒடிசா போலீசார் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+