பணமதிப்பிழப்பிற்கு பிறகு கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு... ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
உயர் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

டெல்லி: உயர் மதிப்புடைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று சந்தேகப்படும்படியான பணப்பரிவர்த்தனையானது 480 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் நிதித்துறை புலனாய்வு பிரிவின் தகவல் கூறுகிறது.
கறுப்புப்பணத்தை ஒழிக்கும் விதமாக நாடு முழுவதும் உயர் மதிப்புடைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் மதிப்பிழப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 8, 2016ம் ஆண்டு 8 மணியளவில் மக்கள் மத்தியில் உரையாடிய நரேந்திர மோடி தீவிரவாதிகள் மத்தியில் பணநடமாட்டத்தை குறைக்கவும், பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டு வரும் விதமாகவும் இந்த நடவடிக்கை உடனுக்குடன் அமலுக்கு வருவதாக அறிவித்தார்.
முன்ஏற்பாடுகள் இன்றி திடீரென அறிவிக்கப்பட்ட இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பணப்புழக்கமின்றி மக்கள் திண்டாடினர். தங்கள் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை கூட எடுக்க முடியாமல் வரிசையில் காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

பொருளாதார நிலைகுலைவு
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் நிலைகுலைந்தது, மக்கள் ஏடிஎம் ஏடிஎம்களாக பணம் தேடி அலைந்தனர். போதுமான அளவு பணம் கிடைக்காமல் திண்டாடிய மக்களுக்கு 'டிஜிட்டல் இந்தியா' வழியை காட்டியது மத்திய அரசு. அதாவது பணப்பரிமாற்றங்கள் முழுவதையும் டிஜிட்டல் முறைக்கு மாற்ற அறிவுறுத்தியது.

கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகம்
இந்நிலையில் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் மதிப்பிழந்ததற்குப் பின்னர் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் அதிக அளவில் கள்ள நோட்டுகள் பிடிபட்டு வருவதாகவும் மத்திய அரசின் நிதித்துறை நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது.

480 சதவீதம் அதிகரிப்பு
2015-16 நிதியாண்டில் இருந்ததை விட கள்ள நோட்டுகளின் புழக்கமும், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றமும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட 2016- 17ம் நிதியாண்டில் 480 சதவீதம் அதிகரித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவின் ஆய்வறிக்கை கூறுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னர் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பிடிபட்ட நிலையில் 2016-17 நிதியாண்டில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளதாக நிதித்துறை நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு குறிப்பிடுகிறது.

நெருக்கடி தரும் அறிக்கை
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எவ்வளவு கறுப்புப்பணம் பிடிபட்டுள்ளது என்ற விவரம் இன்னும் வெளியிடப்படாத நிலையில் பிரதமரின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் நிதித்துறை நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவின் இந்த அறிக்கை எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை போல அமைந்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications