பாலியல் புகார்- நீதிபதி ஏ.கே. கங்குலி மீது கொல்கத்தா போலீஸ் வழக்கு பதிவு!
Subscribe to Oneindia Tamil

சட்ட பயிற்சி மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் ஏ.கே. கங்குலி என்பது புகார். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த குழு விசாரணை நடத்தி அறிக்கையையும் தாக்கல் செய்திருக்கிறது.
இந்நிலையில் பாரத பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பினர் கொல்கத்தா போலீஸ் இந்த பாலியல் தொந்தரவு தொடர்பாக புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து நீதிபதி ஏ.கே. கங்குலி மீது இன்று கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
ஏற்கெனவே மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவியில் இருந்து ஏ.கே. கங்குலி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் தற்போது வழக்கு பதிவு செய்திருப்பது அவருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications