டெல்லி குஜராத் பவனில் தீ விபத்து: 8 வாகனங்களில் சென்று போராடி தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்
டெல்லி: டெல்லி குஜராத் பவனில் ஏற்பட்ட தீ விபத்தை, தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
டெல்லியில் உள்ள குஜராத் பவனின் அடித்தளத்தில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தொலைபேசி வாயிலாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். சுமார் 8 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்க வீரர்கள் கடுமையாக போராடினர்.

பெரும் போராட்டத்திற்குப் பின் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்து காலைநேரத்தில் நிகழ்ந்ததால் பெரும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட குஜராத் பவனின் அடித்தளத்தில் பழைய நாற்காலிகள் போன்ற பொருட்கள் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த தீ விபத்துத் தொடர்பாக குஜராத் பவன் அதிகாரிகளே விசாரிக்க வேண்டும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications