மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து.. திடீரென பற்றி எரிந்த கூடாரம்.. பெரும் பரபரப்பு!
பிரயாக்ராஜ்: உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. அங்கு புனித நீராட மக்கள் குவிந்து வரும் சூழலில், திடீரென இன்று அங்கு 18வது செக்டாரில் தீவிபத்து ஏற்பட்டது. பல கூடாரங்கள் பற்றி எரிந்தன.
இந்துக்களின் முக்கியமான மத ஒன்றுகூடல் நிகழ்ச்சியாக அறியப்படும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வருகிறது. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வாகும்.

கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா வெகு சிறப்பாக நடந்து வருகிறது. இதில் பல கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள்.
இதற்கிடையே மகா கும்பமேளாவின் 18வது செக்டாரில் இப்போது தீ விபத்து ஏற்பட்டது. சங்கராச்சாரியார் மார்க்கில் உள்ள ஹரிஹரானந்த் முகாமில் உள்ள கூடாரங்களில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே அங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இப்போது மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.












Click it and Unblock the Notifications