Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மஹாராஷ்டிரா கெமிக்கல் ஆலையில் பயங்கர தீ விபத்து... 3 பேர் பலி, 14 பேர் காயம்!

மும்பையில் மருத்து கம்பெனியின் கெமிக்கல் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மகாராஷ்டிரா கெமிக்கல் ஆலையில் தீ விபத்து- வீடியோ

    மும்பை : மஹாராஷ்டிர மாநிலம் பால்கர் பகுதியில் உள்ள மருந்து கம்பெனியின் கெமிக்கல் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயனங்கள் வெடித்து சிதறுவதால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளும் பாதிப்பை கண்டுள்ளன. தீ விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர், 14 பேர் காயமடைந்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் தாராப்பூர் நகரில் உள்ள பால்கர் பகுதியில் பார்மசூட்டிகல் நிறுவனத்தின் ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. முதற்கட்ட தகவல்படி நேற்று இரவு 11.15 மணியளவில் 25 பீப்பாய்களில் 200 லிட்டர் ரசாயனங்கள் நிரப்பி வைக்கப்பட்டிருந்துள்ளன.

    Fire broke out in a chemical factory in Palghar's Tarapur killed 3

    இந்த ரசாயனங்கள் வெடித்ததன் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் 3 அடையாளம் தெரியாத உடல்களை மீட்டுள்ளனர். மேலும் 15 பேர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ரசாயன ஆலை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை இல்லாமல் செயல்பட்டதே விபத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. ரசாயனங்கள் வெடித்து சிதறுவதால் இந்த கட்டிடத்தை சுற்றியுள்ள சுமார் 10 மீட்டர்இடைவெளியில் உள்ள வீடுகளின் கண்ணாடி, மற்றும் கதவுகள் சேதமடைந்துள்ளன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+