குவியல் குவியலாக புதையல் கண்டெடுக்கப்பட்ட பத்நாபசுவாமி கோவிலில் தீ விபத்து... 2 பேர் படுகாயம்
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
திருவனந்தபுரம்: பத்மநாபசுவாமி கோவில்லில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள பாதாள அறையில் குவியல் குவியலாக தங்க, வைர, வைடூரிய நகைகள் இருந்தது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கோவிலுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரிடம் இருந்த கோவிலின் நிர்வாகம் தற்போது சுப்ரீம் கோர்ட்டு நியமித்த குழுவினரிடம் உள்ளது. தற்போது இங்கு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

பத்மநாபசுவாமி கோவிலில் தீ விபத்து
இந்நிலையில் இன்று அதிகாலையில் கோவிலின் வடக்கு வாசல் பகுதியில் கரும்புகை கிளம்பியது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியது.

விரைந்த தீயணைப்புத்துறையினர்
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருவனந்தபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கோவில் பாதுகாவலர்களும் தீ பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

2 பேர் படுகாயம்
இதனால் தீ கட்டுப்படுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் மற்றும் கோவில் பாதுகாவலர் ஒருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஸ்டோர் ரூமில் தீ விபத்து
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணங்களை விசாரித்து வருகின்றனர். வடக்கு வாசல் பகுதியில் பழைய பொருட்கள் வைத்திருந்த கிடங்கில் தீப்பிடித்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மக்கள் திரண்டதால் பரபரப்பு
இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்து பற்றி தெரிய வந்ததும், ஏராளமானோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications