ஜார்க்கண்ட் பட்டாசு ஆலையில் விபத்து... 8 பேர் பலி, 25 பேர் காயம்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுவர் இடிந்து விழுந்து 8 பேர் பலியாகியுள்ளனர், 25 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video

ஜாம்ஷெத்பூர் : ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 25 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்க்பம் மாவட்டத்தில் பட்டாசு குடோன் ஒன்றில் சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளனர். குமர்டுபி கிராமத்தில் உள்ள இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது விபத்தில் அறையின் சுவர் இடிந்து விழுந்துள்ளது, இதில் 8 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பட்டாசு குடோனில் பணியில் ஈடுபட்டிருந்த 25 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என்று கூறப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று போலீசார் கூறியுள்ளார். தீபாவளி பண்டிகை வருவதால் அதிக அளவில் பட்டாசு அடுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது, இதனால் தொடர்ந்து பட்டாசு குடோனில் வெடித்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications