ரன்வேயில் ஓடிய ஜெட் ஏர்வேஸ் என்ஜினில் தீ: கடைசி வினாடியில் 'டேக்-ஆப்' ரத்து- பயணிகள் தப்பினர்
டெல்லி: டெல்லியில் இருந்து போபால் கிளம்பிய விமான என்ஜினில் தீப் பிடித்ததையடுத்து அந்த விமானம் டேக் ஆப் செய்வது கடைசி வினாடியில் நிறுத்தப்பட்டது.
இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் இருந்து போபாலுக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் கிளம்பியது.

ரன்வேயில் விமானம் ஓடியபோது வலதுபுற என்ஜினில் தீப் பிடித்தது. இதைப் பார்த்த பயணிகள் கூச்சலிட்டனர். அதே நேரத்தில் என்ஜினில் தீப் பிடித்ததற்கான அலாரமும் ஒலித்தது.
இதையடுத்து அந்த விமானம் டேக் ஆப் செய்வதை கடைசி வினாடியில் விமானிகள் தவிர்த்தனர். விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் அவசரமாக தரையிறக்கப்பட்டனர்.
ஆனால், விமான என்ஜினில் தீப் பிடித்ததாக தவறாக அலாரம் ஒலித்ததாகவும், பின்னர் அந்த அலாரம் ஒலிப்பது நின்றுவிட்டதாகவும், தீயே பிடிக்கவில்லை என்றும் ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
இந்த விமானத்தில் 88 பயணிகள் இருந்தனர்.












Click it and Unblock the Notifications