மகாஜன்- முண்டே குடும்பத்தை அரசியலில் இருந்து ஒழிக்க சதியா? பாஜக தலைவர்கள் கேள்வி!!
டெல்லி: அன்று பிரமோத் மகாஜன் - இன்று கோபிநாத் முண்டே ஆகியோர் அகால மரணமடைந்திருப்பது அந்த குடும்பத்தினரையே அரசியலில் இருந்து ஒழிக்க நடத்தப்பட்ட சதியா? என்று பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு சகோதரரால் சுடப்பட்டு உயிரிழந்தார். தற்போது அவரது மைத்துனர் கோபிநாத் முண்டே சாலை விபத்தி சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த இரு அகால மரணங்களின் பின்னணியிலும் சதி இருக்கக் கூடும் என்று பாஜக தலைவர்கள் சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மகாராஷ்டிரா பாஜக தலைவரான அவதூத் வாக் தமது ட்விட்டர் பக்கத்தில், மகாஜன் -- முண்டே குடும்பத்தினரை அரசியல் இருந்து ஒழிக்க சதியா? இந்த இரு தலைவர்களும் எப்படி அகால மரணமடைய நேரிட்டது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதேபோல் மற்றொரு பாஜக தலைவரான ஸெங்டேவும், ஒரு விஐபி.. மத்திய அமைச்சர். சர்வ சாதாரணமாக சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பதை எப்படி நம்புவது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதேபோல் சமூக வலைதளங்களில் முண்டேவின் மரணத்தின் பின்னால் சதி இருக்கிறதா? என்ற சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications