கோவாவில் போலீசார் போன்று நடித்து 2 பெண்களை பலாத்காரம் செய்த 5 பேர்
பனாஜி: கோவாவில் 5 பேர் போதை தடுப்புப் பிரிவு போலீசார் போன்று நடித்து டெல்லியைச் சேர்ந்த 2 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த 22 வயது பெண் மற்றும் 30 வயது பெண் ஆகியோர் கோவாவில் விடுமுறையை கழித்துள்ளனர். அவர்கள் திங்கட்கிழமை இரவு அன்ஜுனா கடற்கரைக்கு வாடகை டாக்சியில் சென்றுள்ளனர். அப்போது 5 ஆண்கள் அவர்களின் டாக்சியை அர்போரா கிராமத்தில் வழிமறித்து தாங்கள் போதை தடுப்புப் பிரிவு போலீசார் என்று பொய் கூறியுள்ளனர்.

அந்த 5 பேரும் 2 பெண்களின் கைப்பைகளை வாங்கி சோதனை செய்ததுடன் அவர்களை அருகில் உள்ள ஒரு ஃபிளாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவர்கள் அந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து தாக்கியுள்ளனர்.
இது குறித்து டாக்சி டிரைவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்தவுடன் போலீசார் அந்த 2 பெண்கள் அழைத்துச் செல்லப்பட்ட ஃபிளாட்டை கண்டுபிடித்து சென்றனர். அங்கு அந்த 2 பெண்கள் கண் முன்பு போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.
பெண்களை சீரழித்த 5 பேரும் கலன்கூட் கிராமத்தில் இருந்த சர்ச்சைக்குரிய நைட்கிளப்பைச் சேர்ந்தவர்கள். அந்த கிளப்பில் விபச்சாரம் நடப்பதாகக் கூறி கிராமத்து மக்களே அதை இடித்து தரைமட்டமாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் டிராவர் ஜோசப், ஜீவன் பவார், கம்லேஷ் சவுத்ரி, அஜய் குமார் குஷ்வா மற்றும் நதிம் சயீத் என்பது தெரிய வந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications