காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா உட்பட 5 மாவட்டங்களில் உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அப்போது தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியும் நடந்தது.

அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதேபோல், நவ்காம் பகுதியில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் இன்று காலை சுட்டு வீழ்த்தினர்.
துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.
ஜம்மு பிராந்தியத்தின் ஆர்னியா பகுதியில் கடந்த நவம்பர் 27-ந் தேதி தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 ராணுவ வீரர்களும் 5 அப்பாவி மக்களும் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications