Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா உட்பட 5 மாவட்டங்களில் உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அப்போது தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியும் நடந்தது.

Five militants killed in Jammu and Kashmir gunfight

அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதேபோல், நவ்காம் பகுதியில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் இன்று காலை சுட்டு வீழ்த்தினர்.

துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.

ஜம்மு பிராந்தியத்தின் ஆர்னியா பகுதியில் கடந்த நவம்பர் 27-ந் தேதி தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 ராணுவ வீரர்களும் 5 அப்பாவி மக்களும் உயிரிழந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+