ஆந்திரா போலீசின் கொடூர என்கவுண்ட்டர்? 5 தமிழர்களை அடித்தே கொலை செய்து ஏரியில் வீசியதா?
ஆந்திராவில் 5 தமிழர்களை அம்மாநில போலீசார் அடித்தே கொலை செய்து ஏரியில் வீசியிருக்கலாம் என கூறப்படுகிறது.
கடப்பா: ஆந்திராவில் 5 தமிழர்களை போலீசார் அடித்தே கொலை செய்து ஏரியில் வீசியிருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்படுகிறது.
ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக கூறி 2015-ம் ஆண்டு 20 தமிழர்களை சுட்டு படுகொலை செய்தனர் அம்மாநில போலீசார். காக்கை குருவிகளைப் போல தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

30 தமிழர்கள் படுகொலை
இது ஆந்திரா அரசுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியது. இதுவரை 30 தமிழர்கள் ஆந்திரா போலீசால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர்.

ஏரியில் தமிழர்கள் சடலம்
இந்த நிலையில் ஆந்திராவின் கடப்பா ஏரியில் 5 தமிழர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. செம்மரம் வெட்ட சென்ற தமிழர்களை அம்மாநில போலீசார் அடித்தே கொலை செய்துவிட்டு தற்கொலை போல ஏரியில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆந்திரா போலீஸ் கொலை செய்தது?
மனித உரிமை சர்ச்சைகளில் சிக்காமல் இருக்கவே இப்படியான படுபாதக படுகொலையை ஆந்திரா போலீசார் நிகழ்த்தியுள்ளனர் எனவும் சந்தேகம் எழுப்பப்படுகிறது. இது தொடர்பாக உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

அடையாளம் காணும் பணி
ஆந்திரா ஏரியில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்களது உடைமைகளில் இருந்து சில தொலைபேசி எண்கள், புகைப்பட்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications