விடுதியில் இருந்த விமான பணிப்பெண்.. பட்டபகலில் பலாத்காரம் செய்ய முயற்சி.. பரபரப்பு
கொச்சி : கேரளாவின் எர்ணாகுளம் அருகே விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்த நாகலாந்தைச் சேர்ந்த விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் விடுதியில் அறைகளை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பாலாரி வட்டத்தில் நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த விமான பணிப்பெண்ணான இளம்பெண் ஒருவர் விடுதியில் அறை எடுத்து வசித்து வருகிறார். அந்த குறிப்பிட்ட விடுதியில் கோட்டயம் மாவட்டம் கீழ்குன்னு பகுதியை சேர்ந்த 24 வயதாகும் டினு தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் போலீசார் விசாரணையில் வெளிவந்த தகவலின் படி, சம்பவத்தன்னு மதியம் விடுதியில் விமான பணிப்பெண் தங்கியிருந்த அறைக்கு சுத்தம் செய்ய வேண்டி ஊழியர் டினு பிலிப் சென்றிருக்கிறார்.
இந்த சந்தர்ப்பத்தில் அறையில் விமான பணிப்பெண் மட்டும் தனியாக இருப்பதை அறிந்த டினு பிலிப், அவரிடம் தகாத முறையில் நடந்துக்கொண்டுள்ளார். அத்துடன் விமானப் பணிப்பெண்னை கட்டிலில் தள்ளி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்யவும் முயற்சித்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத விமான பணிப்பெண் தன்னை காப்பாற்றும்படி கத்தி கூச்சலிட்டு உள்ளார். இவரது கூச்சல் சத்தம் கேட்டு விடுதியின் நிர்வாகத்தினர், பக்கத்து அறைகளில் வசிப்பவர்கள் ஓடிவந்தார்கள். அப்போது அவர், நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து தூய்மை பணியாளர் டினு பிலிப்பை பிடித்து வைத்து, பாலாரி வட்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் பாலாரி போலீசார் விரைந்து வந்து டினு பிலிப்பை கைது செய்தார்கள். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து டினு பிலிப்பை எர்ணாகுளம் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்த நாகலாந்தைச் சேர்ந்த விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய தூய்மை பணியாளர் முயற்சி செய்த சம்பவம் எர்ணாகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications