ஹிராகுட் அணையிலிருந்து வினாடிக்கு 8 லட்சம் கனஅடி நீர் திறப்பு... 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்
Recommended Video

புரி: ஒடிஸா மாநிலம் ஹிராகுட் அணையிலிருந்து வினாடிக்கு 8 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படவுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் ஹிராகுட் அணைக்கு ஏராளமான நீர் வந்தது. இதையடுத்து அங்கிருந்து வினாடிக்கு 8 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படவுள்ளது. மகாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டதுதான் ஹிராகுட் அணை.

இதனால் ஒடிசாவின் மகாநதியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. மேலும் ஒடிசாவில் கட்டாக், பூரி உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வினாடிக்கு 8 லட்சம் கனஅடி என்பது மிகப் பெரிய வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டு விடுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த அணையின் 25 மதகுகளும் திறந்துவிடப்படுகிறது. இதையடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மகாநதி ஆற்றின் வெள்ள பெருக்கு ஏற்படும் வாய்ப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்குமாறு ஒடிஸா அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் 8 முதல் 8.5 லட்சம் கனஅடி நீர் நாளை முண்டாலியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications