நம்பிக்கை வாக்கெடுப்பில் மெஜாரிட்டி எங்கள் பக்கம்தான்... குலாம் நபி ஆசாத்
நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்கள் பக்கம்தான் மெஜாரிட்டி உள்ளது என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
Recommended Video

பெங்களூர்: கர்நாடகத்தில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்கள் பக்கம்தான் மெஜாரிட்டி உள்ளனர் என்பதால் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பாஜக 104 எம்எல்ஏக்களை கொண்டுள்ள போதிலும் தங்களிடம் 120 எம்எல்ஏக்கள் உள்ளதாக கூறுகின்றனர்.

அதுபோல் மஜத கட்சியில் 3 எம்எல்ஏக்களை காணவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ எங்களிடம் உள்ள 78 எம்எல்ஏக்களும் பத்திரமாக உள்ளனர் என்று கூறிவருகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், பாஜகவுக்கு எதிராகவே எம்எல்ஏக்களின் எண்ணிக்கை உள்ளது. பெரும்பாலான எம்எல்ஏக்கள் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர்.
எனவே நிச்சயம் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா தோல்வி பெறுவார். நாங்கள் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications