மாட்டுத் தீவன ஊழல் வழக்கு - பீகார் மாஜி முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ராவின் தலை தப்பியது
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் மாஜி முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ராவின் தலை தப்பியுள்ளது.
ராஞ்சி: தியோகர் மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து 89 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் வழக்கில் லாலு உள்ளிட்ட17 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்த ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜெகன்நாத்மிஸ்ரா உள்ளிட்ட 6 பேர் விடுதலை செய்தது.
பீகாரில் கடந்த 1991 முதல் 1995 வரையில் முதல்வராக லல்லு பிரசாத் யாதவ் இருந்தபோது கால்நடை தீவனம் வாங்குவதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. தியோகர் மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து 89 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக லல்லு பிரசாத் உள்ளிட்ட 22 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த ஊழல் வழக்கில் சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் இருந்து 37 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததற்காக 2013ம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் லல்லு பிரசாத் யாதவிற்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதேபோல், இந்த வழக்கில் லல்லு பிரசாத் மீது மேலும் 3 வழக்குகள் விசாரணையில் உள்ளன.
இந்த வழக்கில் ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால் சிங் தீர்ப்பளித்தார். லாலு பிரசாத் யாதவை குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி ஷிவ்பால் சிங், ஜெகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 6 பேரை விடுவித்து உத்தரவிட்டார்.
குற்றவாளிகளுக்கு ஜனவரி 3ஆம் தேதியன்று தண்டனை அறிவிக்கப்படும் என்று நீதிபதி ஷிவ்பால் சிங் கூறியுள்ளார். இதன் மூலம் மாஜி முதல்வரான லாலு மீண்டும் சிறை செல்ல உள்ளார். ஜெகன்நாத் மிஸ்ராவின் தலை தப்பியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications