சுப்ரீம் கோர்ட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள்: நீதிபதிகள் கூட்டாக பரபரப்பு பேட்டி
Subscribe to Oneindia Tamil
Recommended Video

உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் சரி இல்லை... உச்சநீதிமன்ற நீதிபதிகள்- வீடியோ
டெல்லி: இந்திய வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபிதிகள் சிலர் இணைந்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் சுப்ரீம் கோர்ட்டில் நடப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 4 நீதிபதிகள் இணைந்து டெல்லியிலுள்ள நீதிபதிகளுக்கான இல்லத்தில் வைத்து பேட்டியளித்தனர். மதியம் 12.15 மணிக்கு பேட்டி தொடங்கியது.
உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்கும், கொலிஜியம் முறையை கடுமையாக விமர்சித்தவர் செல்லமேஸ்வர் என்பது நினைவிருக்கலாம்.நீதிபதிகள் கூறுகையில், கடந்த சில மாதங்கலாக விரும்பத்தகாத நிகழ்வுகள் சுப்ரீம்கோர்ட்டில் நடக்கின்றன. இப்படியே போனால் ஜனநாயகம் நிலைக்காது. இந்தியா என்று கிடையாது, உலகின் எந்த நாட்டிலும் ஜனநாயகம் நிலைக்காது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications